ads

பூச்சரம் புறவம்

பூச்சரம் புறவம்
பிரிவு சோகங்கள் ....

வார்த்தைகளின் பிரிவு
வார்க்கபடாத மௌனம் ..

வரிகளின் பிரிவு
வடிக்கப்படாத வெள்ளை தாள் ..

வண்ணங்களின் பிரிவு
வரையபடாத வண்ணங்கள் ...

வயதின் பிரிவு
வாலிபம் தொலையும் காலம் ...

வறுமையின் பிரிவு
வயிற்று பசி தீர்க்கும் போது ...

வரவின் பிரிவு
வரவெல்லாம் செலவாகும் போது ..

எண்ணங்களின் பிரிவு
தீராத கனவுகள் ...

என் உள்ளத்தின் பிரிவோ
உன் உள்ளத்தோடு
உள்வாங்கிய நினைவுகளோடு
உணர்வுகளாக உருகிக்கொண்டே ...

வார்த்தைகள் நிலையற்று
கண்கள் மெல்ல ததும்பி
கண்ணீர் விழியோடு கைகோர்த்து
வழிந்தோட வாஞ்சையாய் நின்ற போது
வழியில்லாமல் வலியோடு சோகம் மட்டுமே ...

வரிக்கு வரி வர்ணித்த
கவிதைகளில் வார்த்தைகள் இல்லாது
வரிகள் தவித்த போது
மென்மையான எழுத்துகளும்
வன்மையாக எழுதிய வரி சோகம்....

ஓடி ஓடி நேசம் கொண்டு
ஆடி பாடி அன்பும் கொண்டு
நாடி நின்ற அன்பு கிட்டாத நேரத்தில்
வாடி நின்று தவித்த போது
நான் நாடாமல் வந்ததது இந்த சோகம் ....

பத்திபத்தியாய்
நேசம் கொண்டு எழுதிய
பாச வார்த்தைகளுக்கு
பதில் இல்லாமல் நின்ற போது
பாசமாய் வந்ததது இந்த சோகம் ....

மேகத்தை விட வேகமாய்
வரும் இந்த சோகத்திற்கு
இல்லையோ ஓர் சோகம் .....
சொல்லமுடியாத வார்த்தைகள்
சொல்லியது சோகங்கள் என்றே .....
Share on Google Plus

About blog.kalaisolai.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.