1-ல் இன்ஃபினி தமிழ் இதழ் வெளியீட்டு விழா ஆளுநர் ரோசய்யா வருகை
வேலூர் விஐடி வளாகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை இன்ஃபினி இதழ் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்கேற்க தமிழக ஆளுநர் கே.ரோசய்யா வருகை தரவுள்ளார்.
இதுகுறித்து அம்பாலால் குழுமத் தலைவர் ஜவரிலால் ஜெயின் கூறியது:
மஹாத்ரயா ரா ஆசிரியராக இருந்து அறிவியல், உறவுகள், திருமணம், குழந்தை வளர்ப்பு, பதின்பருவம், மனோதத்துவம், பொருளாதாரம், ஆரோக்கியம், வாழ்வியல் விஞ்ஞானம் உள்ளிட்ட பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட மாதம் இருமுறை இதழாக இன்ஃபினி இதழ் வெளியாகிறது.
இந்த இதழ் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் விஐடி வளாகத்தில் நடைபெறுகிறது. ஆளுநர் கே.ரோசய்யா இதழை வெளியிடுகிறார். விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் விழாவுக்கு தலைமை தாங்குகிறார்.
இவ்விழாவில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் இன்ஃபினிதீயிஸம் பரமன் பச்சைமுத்து, அ.ச.கோபால் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
வேலூர் விஐடி வளாகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை இன்ஃபினி இதழ் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்கேற்க தமிழக ஆளுநர் கே.ரோசய்யா வருகை தரவுள்ளார்.
இதுகுறித்து அம்பாலால் குழுமத் தலைவர் ஜவரிலால் ஜெயின் கூறியது:
மஹாத்ரயா ரா ஆசிரியராக இருந்து அறிவியல், உறவுகள், திருமணம், குழந்தை வளர்ப்பு, பதின்பருவம், மனோதத்துவம், பொருளாதாரம், ஆரோக்கியம், வாழ்வியல் விஞ்ஞானம் உள்ளிட்ட பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட மாதம் இருமுறை இதழாக இன்ஃபினி இதழ் வெளியாகிறது.
இந்த இதழ் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் விஐடி வளாகத்தில் நடைபெறுகிறது. ஆளுநர் கே.ரோசய்யா இதழை வெளியிடுகிறார். விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் விழாவுக்கு தலைமை தாங்குகிறார்.
இவ்விழாவில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் இன்ஃபினிதீயிஸம் பரமன் பச்சைமுத்து, அ.ச.கோபால் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
0 comments :
கருத்துரையிடுக