ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டிகளுக்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பாக மணப்பாறை செந்தமிழ் அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நான்காம் ஆண்டாக நடைபெறும் ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டிக்கு நாவல்-நாடகம், சிறுகதை மற்றும் புதுக் கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில் 2013-ஆம் ஆண்டு வெளியான நூல்கள் வரவேற்கப்படுகின்றன.
எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், வாசகர்கள் போட்டிக்கு நூல்களை அனுப்பி வைக்கலாம். ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்படும் நூல்களுக்கு தனித்தனியே ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். நூல்களின் மூன்று பிரதிகளை ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் தமிழ்மணவாளன், 18, பத்மாவதி நகர், மாதவரம் பால் பண்ணை, சென்னை-600 051. என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
0 comments :
கருத்துரையிடுக