அறிஞர் உலகம் வியந்துப் போற்றிய நூல் ''தக்ஷிண இந்திய சரித்திரம்'' என்ற நூலை எழுதியவர் நரசிம்மலு நாயுடு ( 1854 - 1922 ) ஆவார். அவர் தொண்ணூற்று நான்கு நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதியதில் பெரும்பாலும் பயண நூல்களும் ,கவிதை நூல்களுமே ஆகும். இவர் முதலில் 'சுதேசசாபிமானி' என்ற இதழையும் பின்னர் 'கோவை அபிமானி','கோவை கலாநிதி' என்ற பத்திரிகைகளையும் தொடங்கி நடத்தி வந்தார்.
நரசிம்மலு நாயுடு அவர்களின் முயற்சியினால் தான் கோவையில் ஏராளமான நூற்பாலைகள் துவங்கப்பட்டது. அவர் 1885 ல் பம்பாய் சென்று திரும்பியதும் ஸ்டேன்ஸ் என்ற வெள்ளையருடன் சேர்ந்து ஒரு நூற்பாலையை நிர்மாணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டராக திகழ்வதற்கு இவரும் ஒரு காரணமாவார். அவருக்கு ஆங்கில அரசு 'ராவ் பகதூர்' பட்டம் வழங்கி சிறப்பித்தது.
0 comments :
கருத்துரையிடுக