பட்டுக்கோட்டை,
பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கக் கிளைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில்,
சங்கத்தின் சார்பில் வரும் சித்திரை 1-ம் தேதி (ஏப். 14) அன்று மக்கள்
கவிஞர் கல்யாணசுந்தரம் பிறந்த நாளை முன்னிட்டு பட்டுக்கோட்டையில் கலை
இலக்கிய இரவு நிகழ்ச்சியை நடத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிளைத்
தலைவர் க. கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். நிர்வாகிகள் தி. தனபால்,
கந்தசாமி, மருத்துவர் வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். செயலர் முருக.
சரவணன் வரவேற்றார். பொருளாளர் கவிஞர் ஆம்பல் காமராஜ் நன்றி கூறினார்.
0 comments :
கருத்துரையிடுக