புதுவை குறளிசைக்கூடு இலக்கிய அமைப்பின் 91-வது இலக்கிய ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. செல்லப்பெருமாள்பேட்டை பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குறளிசைக்கூடு ராமதாஸ் தலைமைத் தாங்கினார். மதிப்பியல் தலைவர் சண்முகசுந்தரம் தொடக்கவுரை ஆற்றினார்.
தொல்காப்பியமும், திருக்குறளும் என்ற தலைப்பில் பேராசிரியர் செல்வம் மற்றும் இலக்கியக் காட்சி என்ற தலைப்பில் நிறுவனர் சொக்கலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும் மொழிவளம் பெற மொழி என்னும் தலைப்பில் பாவலர்கள் நல்லவில்லியன், ஹேமலதா, இளமுருகு உள்ளிட்டோர் கவிதை பாடினர். முன்னதாக அமைப்பு செயலாளர் பாவலர் மு.ஆதிராமன் வரவேற்றார். முடிவில் செயற்குழு உறுப்பினர் கு.சத்தியமூர்த்தி நன்றி தெரிவித்தார்.
1 comments :
நல்லா இருக்கு
கருத்துரையிடுக