ads

ஈரோடு புத்தகத் திருவிழாவின் எட்டாம் நாள்

ஈரோடு புத்தகத் திருவிழாவின் எட்டாம் நாள்  சிந்தனை அரங்க நிகழ்வு
மக்கள் சிந்தனைப் பேரவை வழங்கும் 12 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத்திருவிழாவின் எட்டாம் நாள் சிந்தனை அரங்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
தந்தி டி.வியின் முதன்மைச் செய்தியாசிரியர் ரங்கராஜ் பாண்டே அவர்களும் தி இந்து தமிழ் நாழிதளின் நடுப்பக்க ஆசிரியர் சமஸ் அவர்களும் உரை நிகழ்த்தினர்
முதன்மைச் செய்தியாசிரியர் ரங்கராஜ் பாண்டே அவர்கள் ‘ கருத்து (சு)ந்திரம்’ என்ற தலைப்பில் நம் மொழியைப் பற்றியும் , நம் மொழியில் உள்ள சொற்களைப் பற்றியும் அதன் பல்வேறு பயன்பாடுகளைப் பற்றியும் தனது உரையில் குறிப்பிட்டார்.

ஈரோடு – டி. சந்திரசேகர் வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர், தலைமையேற்றார்.
வீ.க.செல்வக்குமார் நிர்வாக இயக்குனர், சென்னை மெட்டெக்ஸ் லேப் (பி) லிட் மற்றும் அழகன் கருப்பண்ணன் இயக்குனரும் வாழ்த்துரை வழங்கினார்.
முன்னதாக பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் விழா அறிமுகவுரையாற்றினார்.
இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் பங்கேற்றனர்.
Share on Google Plus

About blog.kalaisolai.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.