- சு. யுவராஜன்
மு.கு: மிகவும் நிதானமாக என் கருத்தைப் பதிவு செய்யவதற்கு, எழுதுவதை சில நாட்கள் தள்ளிப் போட்டப் பின்பும் காட்டம் குறைய மாட்டேன் என்கிறது. அன்பு, பண்பு, ஒழுக்கம் மொத்தத்தில் தமிழ பண்புகளின் மொத்த உருவமாக விளங்கும் தமிழ்ப் பெரியவர்கள் இந்தக் கட்டுரையைப் படிக்காமல் இருப்பார்களாக.
‘உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்’ என்பார் வள்ளலார். யாருக்கு இது பொருந்தி வருமோ இல்லையோ, மலேசிய தலைவர்களுக்கு நச்சென பொருந்தும். தானைத் தலைவர் தொடங்கி, மக்கள் தலைவர், சின்னச் சின்ன விக்கல் தலைவர்கள் வரை இந்தப் பட்டியல் நீளும். ஆனால் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவரும் இந்த பட்டியலில் இருப்பவர் என்பதை அண்மையில் அறிந்தேன். (இவரின் அசட்டுதனங்களை முன்பே அறிந்தவன் என்பதால் ‘அதிர்ச்சியடைந்தேன்’ என எழுத முடியவில்லை.) இதை நான் அறிந்தபோது, தலைவர் தமிழ், தமிழ் இலக்கியப் பாடங்களை அழிக்க முயலும் அரசாங்கத்தின் நரிப் புத்திக்கு எதிராக மேடையில் சிம்ம கர்ஜனை எழுப்பிக் கொண்டிருந்தார். (தன் பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளியில் படிக்கவைக்காதவர் பிறகு எதற்கு இத்தனை சிலுப்பு சிலுப்பினார், யான் இன்றும் அறியேன் பராபரமே).
எழுத்தாளர் சங்கத் தலைவருக்கு வைரமுத்து மட்டும்தான் கவிஞர். கருணாநிதி மட்டும்தான் தமிழர் தலைவர். வாழ்க அவரது நம்பிக்கை. அவர்களின் கவிதை வரிகளோடு மட்டும் வளரட்டும் அவர் பணி. எல்லா தமிழர்களையும் தமிழ்ப்பள்ளியில் படிக்க சொல்ல நான் ஒன்றும் ஃபாஸிஸ்ட் அல்ல. தமிழின் முக்கியமான கவிஞர்களின் ஒருவரான ஞானகூத்தனின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகிறது.
‘எனக்கும் தமிழ்தான் மூச்சு - ஆனால்
அதை பிறர் மேல் விடமாட்டேன்’
தனிப்பட்ட கருத்தில் இந்த கவிதையோடு எனக்கு உடன்பாடுதான். தமிழைத் தங்கள் வாழ்வு நெறியாக கொள்ள விரும்பாதவர்கள் தமிழைக் கட்டாயமாக படிக்க சொல்ல நான் ஒன்றும் பிற்போக்குவாதியல்ல. உங்கள் சுதந்திர தேர்வில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. ஆனால் அப்படி முடிவெடுத்து தொடர்ந்து செல்பவர்கள் என்ன இழவுக்கு ‘தமிழ் எங்கள் உயிர், தமிழ் எங்கள் மயிர்’ என மேடையில் போலியாக முழக்கமிடுகிறார்கள் என்பதுதான் எனக்குப் புரிய மாட்டேன் என்கிறது. இப்படிப் போலியாக முழக்கமிடுபவர்களைப் பார்த்து சிறுவயதில் என் குடிக்கார தாத்தாவின் தயவில் கற்றுக் கொண்ட, மனதின் மூலையில் இன்னும் பதுங்கியிருக்கும் கெட்ட வார்த்தைகளில் அர்ச்சனைச் செய்தால்கூட ஆத்திரம் அடங்காது போலும்.
சரி விஷயத்திற்கு வருவோம். எழுத்தாளர் சங்கத் தலைவருக்கு திடீரென ஞானோதயம் பிறந்திருக்கிறது. அதன் அடிப்படையில் சில முக்கியமான கண்டுபிடிப்புகளை இலக்கிய உலகத்திற்கு தந்துள்ளார். அவை பின்வருமாறு:
1. நான்கு ஐந்து பேர் கொண்ட கூட்டம் ஆபாசமாக எழுதிக் கொண்டிருக்கிறது.
2. இவர்களும் விருதுகளை மறுத்துவிடுவார்கள்; மற்றவர்கள் வாங்கினாலும் திட்டுவார்கள்.
3. இப்படியே இருந்தால் எழுத்தாளர் சங்கம் இவர்களை அங்கீகரிக்காது.
பதில்கள் பின்வருமாறு:
1. தன் காதலியை, மனைவியை (அல்லது காதலனை, கணவனை) தவிர பிற பெண்ணை/ஆணை மனதிலும் நினையாத உத்தமர்கள் யாராவது இருப்பார்கள் என்றால் அவர்களிடம் மட்டும் இப்படி ஆபாசமாக எழுதும் மோசமானவர்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்.
2. அதிகார வர்க்கத்திடம் முதுகை வளைத்து வளைத்து முதுகெலும்பே இல்லாமல் போய்விட்டவர்கள் இடும் பிச்சையைச் சுரணையுள்ளவர்கள் மறுப்பார்கள். சுரணைக்கெட்டவர்கள் சிரித்துக் கொண்டே பெற்றுக் கொள்வார்கள். கொடுப்பதையெல்லாம் வாங்கி சட்டைப்பையில் போட்டுக் கொள்ளவேண்டும் என நினைப்பவர்களுக்கு விருது வேண்டாம் என சொல்பவர்களைப் பார்க்க அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கத்தான் செய்யும்.
3. அய்ய்யோடா... விருதே வேண்டாம் என்பவர்களுக்கு அங்கீகாரம் ஒன்றுதான் குறைச்சல்.
அடிப்படைத் தார்மீகமில்லாதவர்களோடு தொடர்ந்து உரையாட அலுப்பாக இருந்தாலும் இன்னும் ஒரு விஷயத்தோடு முடித்துக் கொள்கிறேன். எழுத்துக் கலைக்காகவோ, இல்லை சமூகத்துக்காகவோ ஏதாவதொன்றுக்காக இருந்துவிட்டுப் போகட்டும். எழுத்தின் அடிப்படை சிந்தனைகளில் ஒன்று சமுகநீதி. சமுகநீதியின் முக்கிய கூறுகளில் ஒன்று சுரண்டலுக்கு எதிரான வலுவான குரல். ஆனால் மலேசியாவில் எழுத்தாளனே சுரண்டப்படுவதும் அதை எதிர்த்து குரல் கொடுக்காமல் வாளாவிருப்பதும் பல காலமாக நடந்து வரும் கொடுமை. (இந்த சுரண்டலுக்கு எதிராக எப்போதும் குரல் கொடுத்து வரும் சீ.முத்துசாமி, க.பாக்கியம் போன்றவர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.)
பாமரத் தமிழ் மக்களின் உரிமைக் குரலாக வெட்கமில்லாமல் பறைசாற்றிக்கொள்ளும் மலேசிய தமிழ் நாளிதழ்கள், எந்த பெருமுதலாளியின் சுரண்டலுக்கு முன்னும் சளைத்ததல்ல. 2002-ல் சிறுகதை எழுதத் தொடங்கிய நான் இதுவரையில் பத்துக்கும் குறைவான சிறுகதைகளை எழுதியுள்ளேன். ஒரே ஒரு சிறுகதைதான் தமிழ் நாளேட்டில் வெளி வந்தது. அப்போது இலட்சக்கணக்கில் விற்ற ஞாயிறுப் பதிப்பு, எழுத்தாளனின் படைப்புக்கு தந்த சன்மானம் என்ன தெரியுமா? ரி.ம.30. இத்தனைக்கும் அன்றைய எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்தான் அந்நாளேட்டுக்கு ஆசிரியராக இருந்தார். மில்லியன் கணக்கில் சம்பாதித்துக் கொண்டு மெர்சிடிஸ் பென்சில் வலம் வருபவர்கள் தமிழ்க் காவலர்களாம். தன் உழைப்புக்கு மரியாதையான ஊதியத்தை கோரும் எழுத்தாளன் பேராசைக்காரனாம். என்னே இவர்களின் சமுகநீதி.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு என்னுடைய எழுத்துக்கள் அத்தனையும் சிற்றேடுகள் எனச் சொல்லதக்க காதல், வல்லினம், அநங்கம் ஏடுகளில்தான் வெளிவந்தன. சிலர் எழுதுவதுப் போல் இந்த குழுவினர் சிறுப்பிள்ளைத்தனமான கருத்துக்களை முன் வைப்பவர்கள் அல்ல. தங்களின் சிந்தனைக்கு உட்பட்ட உண்மைகளைத் தயங்காமல் முன் வைப்பவர்கள். அதன் போதாமை முறையாக சுட்டிகாட்டப்படும் பட்சத்தில் அவற்றோடு தொடர்ந்து உரையாட தயங்காதவர்கள். தலைவரின் இப்படிப்பட்ட சிறுப்பிள்ளைத்தனமான கூற்றுகளால் எங்கள் தலைமுடியைக் கூட அசைக்க முடியாது. இறுதியாக தலைவருக்குச் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அற்ப புகழுக்காகவும் விருதுக்காகவும் என் முதுகில் ஏறி சவாரி செய்ய யாரையும் அனுமதிப்பதில்லை. ஏனெனில் நான் சுரணையுள்ளவன்.
மு.கு: மிகவும் நிதானமாக என் கருத்தைப் பதிவு செய்யவதற்கு, எழுதுவதை சில நாட்கள் தள்ளிப் போட்டப் பின்பும் காட்டம் குறைய மாட்டேன் என்கிறது. அன்பு, பண்பு, ஒழுக்கம் மொத்தத்தில் தமிழ பண்புகளின் மொத்த உருவமாக விளங்கும் தமிழ்ப் பெரியவர்கள் இந்தக் கட்டுரையைப் படிக்காமல் இருப்பார்களாக.
‘உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்’ என்பார் வள்ளலார். யாருக்கு இது பொருந்தி வருமோ இல்லையோ, மலேசிய தலைவர்களுக்கு நச்சென பொருந்தும். தானைத் தலைவர் தொடங்கி, மக்கள் தலைவர், சின்னச் சின்ன விக்கல் தலைவர்கள் வரை இந்தப் பட்டியல் நீளும். ஆனால் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவரும் இந்த பட்டியலில் இருப்பவர் என்பதை அண்மையில் அறிந்தேன். (இவரின் அசட்டுதனங்களை முன்பே அறிந்தவன் என்பதால் ‘அதிர்ச்சியடைந்தேன்’ என எழுத முடியவில்லை.) இதை நான் அறிந்தபோது, தலைவர் தமிழ், தமிழ் இலக்கியப் பாடங்களை அழிக்க முயலும் அரசாங்கத்தின் நரிப் புத்திக்கு எதிராக மேடையில் சிம்ம கர்ஜனை எழுப்பிக் கொண்டிருந்தார். (தன் பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளியில் படிக்கவைக்காதவர் பிறகு எதற்கு இத்தனை சிலுப்பு சிலுப்பினார், யான் இன்றும் அறியேன் பராபரமே).
எழுத்தாளர் சங்கத் தலைவருக்கு வைரமுத்து மட்டும்தான் கவிஞர். கருணாநிதி மட்டும்தான் தமிழர் தலைவர். வாழ்க அவரது நம்பிக்கை. அவர்களின் கவிதை வரிகளோடு மட்டும் வளரட்டும் அவர் பணி. எல்லா தமிழர்களையும் தமிழ்ப்பள்ளியில் படிக்க சொல்ல நான் ஒன்றும் ஃபாஸிஸ்ட் அல்ல. தமிழின் முக்கியமான கவிஞர்களின் ஒருவரான ஞானகூத்தனின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகிறது.
‘எனக்கும் தமிழ்தான் மூச்சு - ஆனால்
அதை பிறர் மேல் விடமாட்டேன்’
தனிப்பட்ட கருத்தில் இந்த கவிதையோடு எனக்கு உடன்பாடுதான். தமிழைத் தங்கள் வாழ்வு நெறியாக கொள்ள விரும்பாதவர்கள் தமிழைக் கட்டாயமாக படிக்க சொல்ல நான் ஒன்றும் பிற்போக்குவாதியல்ல. உங்கள் சுதந்திர தேர்வில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. ஆனால் அப்படி முடிவெடுத்து தொடர்ந்து செல்பவர்கள் என்ன இழவுக்கு ‘தமிழ் எங்கள் உயிர், தமிழ் எங்கள் மயிர்’ என மேடையில் போலியாக முழக்கமிடுகிறார்கள் என்பதுதான் எனக்குப் புரிய மாட்டேன் என்கிறது. இப்படிப் போலியாக முழக்கமிடுபவர்களைப் பார்த்து சிறுவயதில் என் குடிக்கார தாத்தாவின் தயவில் கற்றுக் கொண்ட, மனதின் மூலையில் இன்னும் பதுங்கியிருக்கும் கெட்ட வார்த்தைகளில் அர்ச்சனைச் செய்தால்கூட ஆத்திரம் அடங்காது போலும்.
சரி விஷயத்திற்கு வருவோம். எழுத்தாளர் சங்கத் தலைவருக்கு திடீரென ஞானோதயம் பிறந்திருக்கிறது. அதன் அடிப்படையில் சில முக்கியமான கண்டுபிடிப்புகளை இலக்கிய உலகத்திற்கு தந்துள்ளார். அவை பின்வருமாறு:
1. நான்கு ஐந்து பேர் கொண்ட கூட்டம் ஆபாசமாக எழுதிக் கொண்டிருக்கிறது.
2. இவர்களும் விருதுகளை மறுத்துவிடுவார்கள்; மற்றவர்கள் வாங்கினாலும் திட்டுவார்கள்.
3. இப்படியே இருந்தால் எழுத்தாளர் சங்கம் இவர்களை அங்கீகரிக்காது.
பதில்கள் பின்வருமாறு:
1. தன் காதலியை, மனைவியை (அல்லது காதலனை, கணவனை) தவிர பிற பெண்ணை/ஆணை மனதிலும் நினையாத உத்தமர்கள் யாராவது இருப்பார்கள் என்றால் அவர்களிடம் மட்டும் இப்படி ஆபாசமாக எழுதும் மோசமானவர்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்.
2. அதிகார வர்க்கத்திடம் முதுகை வளைத்து வளைத்து முதுகெலும்பே இல்லாமல் போய்விட்டவர்கள் இடும் பிச்சையைச் சுரணையுள்ளவர்கள் மறுப்பார்கள். சுரணைக்கெட்டவர்கள் சிரித்துக் கொண்டே பெற்றுக் கொள்வார்கள். கொடுப்பதையெல்லாம் வாங்கி சட்டைப்பையில் போட்டுக் கொள்ளவேண்டும் என நினைப்பவர்களுக்கு விருது வேண்டாம் என சொல்பவர்களைப் பார்க்க அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கத்தான் செய்யும்.
3. அய்ய்யோடா... விருதே வேண்டாம் என்பவர்களுக்கு அங்கீகாரம் ஒன்றுதான் குறைச்சல்.
அடிப்படைத் தார்மீகமில்லாதவர்களோடு தொடர்ந்து உரையாட அலுப்பாக இருந்தாலும் இன்னும் ஒரு விஷயத்தோடு முடித்துக் கொள்கிறேன். எழுத்துக் கலைக்காகவோ, இல்லை சமூகத்துக்காகவோ ஏதாவதொன்றுக்காக இருந்துவிட்டுப் போகட்டும். எழுத்தின் அடிப்படை சிந்தனைகளில் ஒன்று சமுகநீதி. சமுகநீதியின் முக்கிய கூறுகளில் ஒன்று சுரண்டலுக்கு எதிரான வலுவான குரல். ஆனால் மலேசியாவில் எழுத்தாளனே சுரண்டப்படுவதும் அதை எதிர்த்து குரல் கொடுக்காமல் வாளாவிருப்பதும் பல காலமாக நடந்து வரும் கொடுமை. (இந்த சுரண்டலுக்கு எதிராக எப்போதும் குரல் கொடுத்து வரும் சீ.முத்துசாமி, க.பாக்கியம் போன்றவர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.)
பாமரத் தமிழ் மக்களின் உரிமைக் குரலாக வெட்கமில்லாமல் பறைசாற்றிக்கொள்ளும் மலேசிய தமிழ் நாளிதழ்கள், எந்த பெருமுதலாளியின் சுரண்டலுக்கு முன்னும் சளைத்ததல்ல. 2002-ல் சிறுகதை எழுதத் தொடங்கிய நான் இதுவரையில் பத்துக்கும் குறைவான சிறுகதைகளை எழுதியுள்ளேன். ஒரே ஒரு சிறுகதைதான் தமிழ் நாளேட்டில் வெளி வந்தது. அப்போது இலட்சக்கணக்கில் விற்ற ஞாயிறுப் பதிப்பு, எழுத்தாளனின் படைப்புக்கு தந்த சன்மானம் என்ன தெரியுமா? ரி.ம.30. இத்தனைக்கும் அன்றைய எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்தான் அந்நாளேட்டுக்கு ஆசிரியராக இருந்தார். மில்லியன் கணக்கில் சம்பாதித்துக் கொண்டு மெர்சிடிஸ் பென்சில் வலம் வருபவர்கள் தமிழ்க் காவலர்களாம். தன் உழைப்புக்கு மரியாதையான ஊதியத்தை கோரும் எழுத்தாளன் பேராசைக்காரனாம். என்னே இவர்களின் சமுகநீதி.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு என்னுடைய எழுத்துக்கள் அத்தனையும் சிற்றேடுகள் எனச் சொல்லதக்க காதல், வல்லினம், அநங்கம் ஏடுகளில்தான் வெளிவந்தன. சிலர் எழுதுவதுப் போல் இந்த குழுவினர் சிறுப்பிள்ளைத்தனமான கருத்துக்களை முன் வைப்பவர்கள் அல்ல. தங்களின் சிந்தனைக்கு உட்பட்ட உண்மைகளைத் தயங்காமல் முன் வைப்பவர்கள். அதன் போதாமை முறையாக சுட்டிகாட்டப்படும் பட்சத்தில் அவற்றோடு தொடர்ந்து உரையாட தயங்காதவர்கள். தலைவரின் இப்படிப்பட்ட சிறுப்பிள்ளைத்தனமான கூற்றுகளால் எங்கள் தலைமுடியைக் கூட அசைக்க முடியாது. இறுதியாக தலைவருக்குச் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அற்ப புகழுக்காகவும் விருதுக்காகவும் என் முதுகில் ஏறி சவாரி செய்ய யாரையும் அனுமதிப்பதில்லை. ஏனெனில் நான் சுரணையுள்ளவன்.
0 comments :
கருத்துரையிடுக