ads

எழுத்தாளர் ஜெயகாந்தன் கவலைக்கிடம்

சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரிதாரப் பூச்சு இன்றி நேரடியாகச் சொல்லும் ஆண்மையாளன் என்று சொல்லப்படும் 80 வயது எழுத்தாளர் ஜெயகாந்தன், கடந்த மூன்று மாத காலமாகவே நினைவாற்றல் பாதிப்பால் அவதியுற்று வந்தார். மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்த அவரது நிலைமை தற்போது மோசமடைந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

1950-ல் தனது இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கிய ஜெயகாந்தன், மத்திய அரசின் இலக்கியத்துக்கான மிக உயரிதாகக் கருதப்படும் ஞான பீட விருதைப் பெற்றவர்.
Share on Google Plus

About blog.kalaisolai.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.