புதுச்சேரி
இந்திய கலாச்சார துறையின் கீழ் இயங்கி வருகிற தஞ்சை தென்னக பண்பாட்டு மையம், பாரம்பரிய கலை மற்றும் கைவினை ஆகிய துறைகளில் திறமை வாய்ந்த இளம் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறது. விருதாளர்களுக்கு ரூ.10ஆயிரம் பண முடிப்பு வழங்கப்படுகிறது. இந்த விருதினைப்பெற பாரம்பரிய கலை மற்றும் கைவினை ஆகிய துறைகளில் குறிப்பிட்ட பணிகள் ஆற்றி இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்கள் இந்த விருதினை பெற விண்ணப்ப படிவத்தை கலை பண்பாட்டு துறையில் அலுவலக நாட்களில் பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களை வருகிற 31–ந் தேதிக்குள் இயக்குனர், தஞ்சைத் தென்னக பண்பாட்டு மையம், தஷ்ஷிணி மருத்துவ கல்லூரி சாலை, தஞ்சாவூர். என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்கண்டவாறு புதுச்சேரி அரசு கலை பண்பாட்டு துறை இயக்குனர் மலர்க்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
0 comments :
கருத்துரையிடுக