ads

சர்வதேச மகளிர் தினம்: கவிதை, கட்டுரைப் போட்டிகள்


புதுச்சேரி,
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு புதுவை அன்னை தெரசா சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மையம் சார்பில் கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடத்த உள்ளது.
இந்தப் போட்டி குறித்து அதன் மைய செயலாளர் ழுஸ்தீன் மரி வெளியிட்ட அறிக்கை:
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி அன்னை தெரசா சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மையம் சார்பாக பாரதி கண்ட புதுமை பெண்கள் என்ற தலைப்பில் கவிதையும், கட்டுரையும் வரவேற்கப்படுகின்றன.
இந்தப் போட்டியில் வயது வரம்பு கிடையாது. யார் வேண்டுமானாலும் எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய முகவரி: தலைவர் செயலாளர், அன்னை தெரசா சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மையம், எண். 3, தெற்கு வீதி, நோணாங்குப்பம், புதுச்சேரி-605007 என்ற முகவரிக்கு தங்களது பெயர், முழு முகவரி, மொபைல் எண் முதலியவற்றை குறிப்பிட்டு வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் எழுதி அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். சிறந்த கவிதை மற்றும் கட்டுரைக்கு சிறப்பான பரிசும், நற்சான்றிதழ்களும் வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Share on Google Plus

About blog.kalaisolai.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.