சிங்கப்பூர் கவிமாலை அமைப்பு மாதந்தோறும் நடத்தும் கவிமாலையின் 14வது
ஆண்டுத் துவக்க நிகழ்வு, காதலர்தினச் சிறப்புக் கவியரங்கமாக நடந்தது.
ஜலான்புசார் இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து நடத்திய இந்நிகழ்வில்
கவிஞர் மா.அன்பழகன் வரவேற்றார். சிங்கப்பூரில் காதலர் தினத்தை, அன்பர்
தினமாகக் கொண்டாடுவது வழக்கம். முதல் அங்கமாக படித்ததிலும், வடித்ததிலும்
தங்களுக்குப் பிடித்த கவிதைகளைக் கவிஞர்கள் படைத்தனர்.
சிறப்புக்
கவியரங்கம், கவிஞர் ந.வீ.விசயபாரதி தலைமையில் நடந்தது. இளங்கவிஞர்கள்
எழுவர் பங்கேற்றனர். குறுஞ்செய்தி என்ற தலைப்பில் சக்திக் கண்ணன், இதயம்
என்ற தலைப்பில் ராஜு ரமேஷ், தொலைபேசி என்ற தலைப்பில் தாயுமானவன்
மதிக்குமார், ரோஜா என்ற தலைப்பில் முத்துப் பேட்டை மாறன், வாழ்த்து அட்டை
என்ற தலைப்பில் அரங்க ராமசாமி, பரிசுப் பொருள் என்ற தலைப்பில் ராஜு
கலைவேந்தன், மின்னஞ்சல் என்ற தலைப்பில் சுப.சத்தியமூர்த்தி கவிதைகளை
படைத்தனர். வழக்கமாக நடைபெறும் போட்டிக் கவிதையும் “விளைநிலம் “ என்ற
தலைப்பில் நடத்தப்பட்டது. புதுவை ரத்தினவேல் அறக் கட்டளை சிறப்புப் பரிசை,
கவிஞர் தாயுமானவன் மதிக்குமார் பெற்றார். ரொக்கப் பரிசை, கவிஞர்கள்
கி.கோவிந்தராசு, ராசு கலைவேந்தன், தியாக ரமேஷ் பெற்றனர். புத்தகப் பரிசை,
கவிஞர்கள் முத்துப்பேட்டை மாறன், ராஜு ரமேஷ்கோபி சரபோஜி பெற்றனர்.
நன்றி : தினமலர்
0 comments :
கருத்துரையிடுக