இன் தமிழை வளர்க்க புலவர்கள் மட்டுமின்றி, அறிவியல், பொறியியல் துறையைச் சார்ந்த பேரறிஞர்களும் பாடுபட்டனர். அவர்களில் முக்கியமானவராக கருதப்படுபவர் பொறியியல் தமிழ்ப் பேரறிஞர் பா.வே.மாணிக்க நாயக்கர் (1871 - 1931). இவர் சென்னை மாநிலப் பொறியியல் கல்லூரியில் படித்து பி.இ., பட்டம் பெற்றார். மாணிக்க நாயக்கர் அவர்கள் தமிழ் ஒலியிலக்கணம், கம்பன் புளுகும் வால்மீகியின் வாய்மையும், தமிழ் எழுத்துக்களின் நுண்மை விளக்கம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
இது மட்டுமல்லாமல் இவர் 'செந்தமிழ்ச் செல்வி' என்னும் இதழில் 48 கட்டுரைகளை எழுதியுள்ளார். மாணிக்க நாயக்கர் எழுதிய தமிழ் ஒலியிலக்கணம் என்னும் நூல் தமிழிலும், ஆங்கிலத்திலும் 1922ம் ஆண்டு சென்னையில் அச்சிடப்பட்டது.
0 comments :
கருத்துரையிடுக